தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம்
இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு நிலையை எடுத்திருக்க இயலாது . மிருக இனம் பறவைகள் கடல் வாழ் உயிரினங்கள் எதுவுமே தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதில் போராடுமே ஒழிய தன்னை எந்த சூழ்நிலையிலும் தானே அழித்துக் கொள்ளாது
அதுவும் பறவை இனங்களோ மற்ற இனத்தை விட தான் வயதாகி இறப்பது கூட உடன் வாழும் மற்ற யாருக்கும் தெரியாமலே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறது அப்படியிருக்க இந்த மானிட மிருகங்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் தன்னை அழித்துக் கொண்டால் தனக்கு பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஒரு வகையினர் அதற்கு பின் என்ன ஆகிறோம் என்று தெரியாததால் உடனடியாக இந்த முடிவை எடுக்கின்றனர்
இதக் கூட விட்டு விடலாம் ஆனால் அனைவருமே தனக்கு தெரிந்தே அற்பத்தனமாக தன்னை அழித்துக்கொள்ள எப்படி முடிகிறது என்று தான் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை அதையும் ஒரு சிலரின் கையில் பொறுப்புகளை தானே பணம் பெற்றுக் கொண்டு எங்களை அழித்துவிடுங்கள் என்று எழுதிக் கொடுக்காதது ஒன்று தான் பாக்கி மற்றபடி தன்னை என்ன செய்தாலும் சரி என்ற நிலையில் தான் இப்பொழுது வாழ்கிறான்.
ஆடம்பரத்தின் மோகத்தை அதிகரித்த ஊடக மன்னர்கள் அதை அனுவிக்க துடிக்கும் ஆடம்பர வெறியர்கள் இருவருக்கும் இடையில் ஒரு இனம் அதாவது நடுத்தர மக்கள் என்ற இனம் அல்லல் பட்டு அவதிப் பட்டு வாழ்ந்துகொண்டிருகிறது
இவர்கள் தான் வர்த்தக உலகின் பலிகடாக்கள். இரண்டு வலிகள் இருந்தாலும் அழிவு வழியை மட்டுமே தேர்ந்தெடுக்கும் மானிட இனம் . இவர்களின் வாழ்க்கை முறைக்கு பிச்சைக்காரர்களாக வாழ்வது எவ்வளவோ மேல் . மன்னிக்கவும் அவர்கள் வாழ்க்கை மிக அற்புதமான வாழ்க்கை கிடைத்தால் சாப்பிட்டு நிம்மதியாக வாழ்பவர்கள் நாளை என்ன செய்ய என்று கவலை இல்லாத மானுட இனம்.
(தேடுவோம் தீர்வை நோக்கி ........)
No comments:
Post a Comment